» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:21:01 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

தமிழ் தாய் வாழ்த்துடன் சுதந்திர தினம் விழா துவங்கியது. கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன்  தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.  ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜாண்வெஸ்லி உறுதிமொழியை வாசித்தார்.  முடிவில் சிவில் துறை தலைவர் ரஞ்சன் குணராஜ் நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.  

நிகழ்ச்சிகளை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில்  ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம்  மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல  பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின்  தாளாளர் முனைவர் ராமா தலைமையில் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன்,  உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory