» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:11:03 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மூன்றாவது சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை கௌரி வரவேற்று பேசினார். விழாவில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நாகர்கோவில் லையன்ஸ் கிளப் அமைப்பின் செயலாளர் லயன் பாலசங்கரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

அதன் பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஜெபமாலை நன்றியுரையாற்றினார். ஆசிரியை கிருபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory