» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சனி 19, ஜூலை 2025 3:13:40 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. 

உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மரக்கன்றினை நட்டு வைத்தார். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி நுழைவு வாயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த செண்பக மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், வளர்ந்த மரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. 

மரக்கன்று நடுவதற்கான ஏற்பாடுகளை தாளாளர் பிரபாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ் வழிகாட்டுதலின்படி, பசுமை மன்ற பொறுப்பாசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.  நிகழ்ச்சியில் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory