» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)



தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாரோன் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமையேற்றார். தலைமை ஆசிரியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்கள். 

விழாவில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 5 ஐந்து பேருக்கு சீருடைகள் மற்றும் 10 பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிறுவன தனராஜ் செய்திருந்தார். விழாவில் இளங்கோவன், சண்முகராஜ், துரை ராஜ், ராய்ஸ்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பள்ளி ஆசிரியை ஹெர்மினா நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory