» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாரோன் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமையேற்றார். தலைமை ஆசிரியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 5 ஐந்து பேருக்கு சீருடைகள் மற்றும் 10 பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிறுவன தனராஜ் செய்திருந்தார். விழாவில் இளங்கோவன், சண்முகராஜ், துரை ராஜ், ராய்ஸ்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பள்ளி ஆசிரியை ஹெர்மினா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


