» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா

வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)



கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செம்கார்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பளிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஒரு மாத கால சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த சுகாதார உதவியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ் தலைமை வகித்தார்.செம்கார்ப் நிறுவன மேலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா, பைபால் ட்ரீ பவுண்டேசன் நிறுவன பணியாளர்கள் ஆதி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார உதவியாளர் பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory