» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை அணிகள் கால்இறுதிக்கு தகுதி
வெள்ளி 26, ஜூலை 2024 11:25:42 AM (IST)

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று அதிகாரபூர்வமாக தொடங்கினாலும், ஒரு சில போட்டிகள் முன்னதாகவே ஆரம்பித்து நடந்து வருகிறது. இதில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் 64 வீராங்கனைகள் கலந்து கொண்டு 12 செட்களில் மொத்தம் 72 அம்புகளை இலக்கை நோக்கி எய்தனர். இதன் முடிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அங்கிதா பகத் (666 புள்ளி) 11-வது இடமும், பஜன் கவுர் (659 புள்ளி) 22-வது இடமும், தீபிகா குமாரி (658 புள்ளி) 23-வது இடமும் பிடித்தனர்.
தென்கொரிய வீராங்கனைஉலக சாதனை
தென்கொரியா வீராங்கனை லிம் சிஹியோன் 694 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தென்கொரியாவின் சயோங் காங் 692 புள்ளிகள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதனை நேற்று தகர்த்தார்.
தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 3 பேரும் எடுத்த புள்ளிகள் ஒட்டுமொத்தத்தின் அடிப்படையில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா (1,983 புள்ளி) 4-வது இடம் பிடித்து நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல் முறையே முதல் 3 இடங்களை பெற்ற தென்கொரியா (2,046), சீனா (1,996), மெக்சிகோ (1,986) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியது. கால்இறுதியில் இந்திய அணி பிரான்ஸ் அல்லது நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
கால்இறுதியில் இந்தியா
ஆண்கள் தனிநபர் பிரிவின் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர்கள் தீரஜ் பொம்மதேவரா (681 புள்ளி) 4-வது இடமும், தருண்தீப் ராய் (674) 14-வது இடமும், பிரவீன் ஜாதவ் (658) 39-வது இடமும் பெற்றனர். தென்கொரியாவின் கிம் வோஜின் (686 புள்ளி) முதலிடமும், கிம் ஜி டியோக் (682) 2-வது இடமும் பிடித்தனர்.
இந்திய வீரர்கள் எடுத்த ஒட்டுமொத்த புள்ளியின் அடிப்படையில் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா (2,013 புள்ளி) 3-வது இடத்தை சொந்தமாக்கி கால்இறுதிக்குள் கால்பதித்தது. இதேபோல் தென்கொரியா (2,049) முதலிடமும், பிரான்ஸ் (2,025) 2-வது இடமும், சீனா (1,998) 4-வது இடமும் பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி கால்இறுதியில் துருக்கி அல்லது கொலம்பியாவை சந்திக்கிறது. கால்இறுதியை தாண்டினால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை அதட்டியது. இஸ்ரேல்-மாலி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ரக்பி செவன்ஸ் ஆண்கள் பிரிவில் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:53:19 PM (IST)

உலக கோப்பை தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!
சனி 15, மார்ச் 2025 3:25:02 PM (IST)

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமன
வெள்ளி 14, மார்ச் 2025 11:50:46 AM (IST)

ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு!
வியாழன் 13, மார்ச் 2025 8:04:21 PM (IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தகுதி பெறாததால் ரூ. 45 கோடி இழப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 11:49:49 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)
