» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஊக்கமருந்து புகார்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!
புதன் 27, நவம்பர் 2024 10:31:09 AM (IST)

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக, பஜ்ரங் புனியாவை ஏப்ரல் 23 ஆம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது. இந்த இடைநீக்கத்தால், அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மா அதிரடி சதம்: 246 ரன்கள் இலக்கை விரட்டி ஹைதராபாத் வெற்றி!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:29:00 PM (IST)

சென்னை அணி தொடர்ச்சியாக 5வது தோல்வி: பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கல்!
சனி 12, ஏப்ரல் 2025 11:13:21 AM (IST)

கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டம் : பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 11:54:05 AM (IST)

சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்துவது மாற்றத்தை தரும் : ருதுராஜ் நம்பிக்கை
வெள்ளி 11, ஏப்ரல் 2025 11:00:36 AM (IST)

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் : 6 அணிகளுக்கு மட்டுமே அனுமதி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 10:53:50 AM (IST)

சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:25:52 PM (IST)
