» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட தயார் : ரோகித் சர்மா, விராட் கோலி அறிவிப்பு!

வெள்ளி 5, ஜனவரி 2024 10:36:52 AM (IST)



டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் ஆடவில்லை.

இந்த நிலையில் டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு குழப்பத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் முறையே நடக்கிறது.

நடப்பாண்டு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட ரோகித் சர்மா , விராட் கோலி விருப்பம் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory