» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 65ஆக தளர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு!!
சனி 1, நவம்பர் 2025 3:47:12 PM (IST)
தாயுமானவர் திட்டம் பயணிகளுக்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமை பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் அப்டேட் ஆகிவிட்டதா? அறிந்துகொள்வது எப்படி?
புதன் 26, நவம்பர் 2025 4:23:16 PM (IST)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 3:43:46 PM (IST)

தூத்துக்குடி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில்: ஆயத்த பணிகள் விரைவில் தொடக்கம்!
புதன் 11, செப்டம்பர் 2024 10:49:54 AM (IST)

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொது சேவை மையம்
புதன் 29, மே 2024 4:19:45 PM (IST)

நத்தம் பட்டா மாறுதல் திட்டம் : ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 8, மார்ச் 2024 5:19:17 PM (IST)

தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி
வியாழன் 8, ஜூன் 2023 12:48:27 PM (IST)









