» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை : டீன் நேரு தகவல்!
ஞாயிறு 24, ஏப்ரல் 2022 8:05:28 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.16கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு கூறினார்.
தூத்துக்குடி இந்திய மருத்துவ கழகம் சார்பில் புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து டாக்டர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப்பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தேசிய தலைவர் அருள்ராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து புற்றுநோயை கண்டறிதல், குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி, நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் மைதிலிபால், புளோரா மற்றும் டாக்டர்கள் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் டீன் நேரு பேசும் போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேசிய நல்வாழ்வுக்குழுமம் சார்பில் ரூ.16 கோடி செலவில் புற்று நோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த கருவி இயங்கி வருகிறது. இதன் மூலம் இதுவரை 372 நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த கருவியை பயன்படுத்தி அரசு டாக்டர்களால் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி தவிர நெல்லை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவியின் முக்கியத்துவம் மக்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழக பொருளாளர் ஆர்த்தி கண்ணன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, டாக்டர்கள் குமரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய மருத்துவ கழக செயலாளர் சிவசைலம் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?
திங்கள் 28, நவம்பர் 2022 10:57:27 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)

அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி டோல்கேட்: கனிமொழி எம்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புதன் 6, ஜூலை 2022 10:54:23 AM (IST)

விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)

தமிழகத்தில் மே 15 முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!
சனி 15, மே 2021 12:04:55 PM (IST)

கரோனா காலத்திலும் வ.உ.சி துறைமுகம் 31.79 மில்லியன் டன் சரக்கு பெட்டகங்களை கையாண்டு சாதனை!!
வெள்ளி 14, மே 2021 11:35:27 AM (IST)

ஒட்டு போட்ட முட்டாள் தமிழன்Oct 5, 2022 - 09:30:21 AM | Posted IP 162.1*****