» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க நடவடிக்கை - அமைச்சரிடம் கோரிக்கை!
வியாழன் 13, மே 2021 3:14:39 PM (IST)
தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர், அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் மேட்டுப்பட்டி சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை ஒரு வருடத்திற்கு முன்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் இது பயன்பாட்டிற்கு வராமலும், செயல்படாமலும் உள்ளது.
தற்பொழுது கொரானோ நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் சூழ்நிலையில் மையவாடி எரிவாயு தகன மேடையில் வரிசையில் காத்திருந்து இறந்தவர்களை எரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.ஆகவே மேட்டுப்பட்டி சுடுகாடு எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க அமைச்சர் ஆணையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி டோல்கேட்: கனிமொழி எம்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புதன் 6, ஜூலை 2022 10:54:23 AM (IST)

விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)

தமிழகத்தில் மே 15 முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!
சனி 15, மே 2021 12:04:55 PM (IST)

கரோனா காலத்திலும் வ.உ.சி துறைமுகம் 31.79 மில்லியன் டன் சரக்கு பெட்டகங்களை கையாண்டு சாதனை!!
வெள்ளி 14, மே 2021 11:35:27 AM (IST)
_1607430322.jpg)
குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆற்றின் கரையில் உடைப்பு - ஆட்சியர் ஆய்வு!!
செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆற்றின் கரையில் உடைப்பு - ஆட்சியர் ஆய்வு!!
சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

அன்புமே 23, 2021 - 09:44:25 PM | Posted IP 108.1*****