» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, விக்ரம் சோலார் நிறுவனம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தனது அதிநவீன மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2,670 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காங்கிரஸ் அமைச்சரை விடுவிக்கத் தவெக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வியாழன் 9, ஜூலை 2026 4:53:50 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
வியாழன் 9, ஜூலை 2026 3:33:15 PM (IST)

கரூரில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
வியாழன் 9, ஜூலை 2026 3:18:55 PM (IST)

கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் அதிரடி!
வியாழன் 9, ஜூலை 2026 11:56:54 AM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)








