» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

KoodankulamPowerP.jpg

டர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மாலை முதலாவது அணு உலையின் டர்பன் பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாகப் பழுதைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, முதலாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பழுது சரிசெய்யப்பட்டு அண்மையில்தான் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், 2-வது அணு உலையில் வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory