» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: சுகாதாரத் துறைக்கு அதிரடி உத்தரவு!

புதன் 8, ஜூலை 2026 8:36:10 PM (IST)

CMvijayEgmoreGh.jpg

தமிழக முதலமைச்சர் விஜய் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். 

இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், உயர் அரசு அதிகாரிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள், நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய் நல சேவைகள், மகப்பேறு மருத்துவ சிகிச்சைகளின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

உள்நோயாளிகள் பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள், அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்து மாத்திரைகளின் தரம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.

ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தரமான, பாதுகாப்பான, மிக விரைவான மருத்துவச் சேவைகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory