» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார். மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் வரை ராஜேஷ் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்துத் துறை ரீதியான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகத் திறக்குறைவு மற்றும் நிதி மோசடி புகாரில் சிக்கிய ஊராட்சி செயலாளர் ராஜேஷைப் பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை அப்பகுதி ஊராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மோதல்: கிள்ளியூர் தொகுதி விவகாரத்தில் கைகலப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:52:53 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)








