» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு

புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)



திருநெல்வேலியில் சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026ஐ முன்னிட்டு, முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் நடைபெற்றது

திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் இன்று (07.01.2026) முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 2026, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (VVPATs) ஆகியவை, திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பெங்களுரைச் சேர்ந்த BEL நிறுவன பொறியாளர்களால் இவ்வியந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது 11.12.2025 முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேற்படி முதல்நிலை சரிபார்ப்பு பணியானது நேற்றுடன் 06.01.2026 நிறைவடைந்துள்ளது.

மேற்படி சரிபார்ப்பு பணியில் Control Unit -2329, Ballot Unit-4190, VVPAT- 2970 எண்ணிக்கையில் நல்ல நிலையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும், மேற்படி சரிபார்ப்பு பணியில் Control Unit 29, Ballot Unit-21, VVPAT- 72 எண்ணிக்கையிலும் குறைபாடு (Defective) உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இன்று 07.01.2026 அன்று காலை 09.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள இயந்திரங்களில் 5% அதாவது 120 இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 120 இயந்திரங்களில் 1% அதாவது 24 இயந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 % அதாவது 48 இயந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 % அதாவது 48 இயந்திரங்களில் 500 வாக்குகளும் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளின் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (07.01.2026) 60 இயந்திரங்களில், நாளை (08.01.2026) 60 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நதிநீர் இணைப்பு திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் மாரிச்செல்வி , தேர்தல் வட்டாட்சியர் முருகன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory