» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளில்லாத ரயில்வே கேட்டில் கல்லூரிப் பேருந்து மீது ரயில் மோதல் - 23 மாணவர்கள் படுகாயம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:43:47 AM (IST)

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே ஆளில்லாத ரயில்வே கேட்டைப் பேருந்து கடக்க முயன்றபோது, சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர்.
காருடையாம்பாளையத்தில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள், நேற்று மாலை கல்லூரி முடிந்து தங்களது வீடுகளுக்குப் பேருந்தில் புறப்பட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை நோக்கிச் சென்ற பேருந்தை, கடவூரைச் சேர்ந்த பெரியசாமி (64) என்பவர் ஓட்டிச் சென்றார்.
ஜல்லிப்பட்டியை அடுத்த குளத்தூர் பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டைப் பேருந்து கடக்க முயன்றது. அப்போது அரியலூரிலிருந்து கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான சரக்கு ரயில், எதிர்பாராத விதமாகப் பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் பேருந்து உருக்குலைந்தது. ரயிலின் வேகத்தால் மோதிய பின்னரும் சுமார் 300 மீட்டர் தூரம் வரை ரயில் தள்ளிச் சென்றது.
விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் வலியால் அலறினர். தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டனர். கார்த்திக் சிவா, பவானி, செல்வ ராகவன், கோகுல கண்ணன் உள்ளிட்ட 23 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த கிரிசுதன் என்ற மாணவர் மேல்சிகிச்சைக்காக கோவையிலும், மேலும் இருவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மாணவர்கள் கூறுகையில், "ரயில் வருவதைக் கண்டு நாங்கள் கத்தினோம், ஆனால் ஓட்டுநர் அதைக் கண்டு கொள்ளாமல் பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நேர்ந்தது" என வேதனையுடன் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்ட்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

பெட்ரோல் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி.க்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:29:44 AM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)







