» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொங்கு மண்டலத்தில் ஜாதி மோதல்களை தடுத்திட வேண்டும் : ஆட்சியரிடம் ஹரி நாடார் மனு
திங்கள் 22, ஜூலை 2024 3:15:01 PM (IST)
கொங்கு மண்டலத்தில் ஜாதிய மோதல்கள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஹரி நாடார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட மாவீரன் கட்டுத்தடிக்காரன் கொங்கு குணாளன் நாடார் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த மாற்று சமுதாயத்தை சார்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கொங்கு மண்டலத்தில் ஜாதிய மோதல்கள் வராமல் தடுத்திட வேண்டியும் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சத்திரிய சான்றோர் படை கட்சியின் சார்பில் ஹரி நாடார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.