» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் 17, அக்டோபர் 2024 10:18:11 AM (IST)



மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை தொடர்ந்து பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது. 

மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் கடந்த 2-ந்தேதி சாலையில் ஜல்லிகள் பெய்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அன்று முதல் மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் மற்றும் தார் போட்டு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது. 

அந்த பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து 13 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் மாற்றுபாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மேம்பாலம் வழியாக பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள், கேரள பஸ்கள், ஆம்னி பஸ்களும் மேம்பாலம் வழியாக இயங்கப்பட்டன. இதனால் கடந்த சில நாட்களாக மார்த்தாண்டத்தில் ஏற்பட்டு வந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடி சற்று குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory