» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். 

கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரால் 4 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மாநில அரசு போதிய செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புச் செயல்திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்கதையாக உள்ள சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory