» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!
புதன் 17, ஜூன் 2026 7:56:49 PM (IST)

தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான விஷு மகாஜன் உத்தரவின்படி, மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை குறித்த சமூக விழிப்புணர்வு மற்றும் நேரடி பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் இளங்குமரன் தலைமை தாங்கி நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவ, மாணவிகளிடையே பேரிடர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மேலும், அவசரகால நடவடிக்கைகள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பல்வேறு பேரிடர்களின் போது தங்களை நல்வழியில் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
அரக்கோணத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுத் தலைவர் சுரேஷ் சந்த் குமாவத் தலைமையில், சிறப்பு விழிப்புணர்வு வகுப்புகளும் அவசரகாலச் செயல்விளக்கப் பயிற்சிகளும் நடைபெற்றன. அவருடன் வந்திருந்த என்.டி.ஆர்.எஃப் ஹவில்தார்களான ரஞ்சித், சக்தி, பொன் செல்வம் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், பேரிடர் மேலாண்மை தொடர்பான பல்வேறு நவீன நுட்பங்களை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.
தொடர்ந்து, வெள்ளம், நிலநடுக்கம், தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவிகள் குறித்து நேரடி செயல்விளக்கங்களைச் செய்து காண்பித்தனர். இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பேரிடர் முன்னெச்சரிக்கை, விபத்து காலங்களில் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் முறைகள், முதலுதவி சிகிச்சை முறைகள் மற்றும் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்பான துல்லியமான நடைமுறை அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், வருவாய் ஆய்வாளர் பொன். முருகேஷ், கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஜெஸ்ஸிபாய் ஹில்டா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள், திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்: 31 பேர் நேரில் மனு அளிப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:38:11 PM (IST)

மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம்: கீதா ஜீவன் குற்றச்சாட்டு
புதன் 17, ஜூன் 2026 8:07:26 PM (IST)

கோவில்பட்டியில் ஜூன் 25-ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்!
புதன் 17, ஜூன் 2026 8:01:36 PM (IST)

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்துக் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 17, ஜூன் 2026 7:50:59 PM (IST)

தூத்துக்குடி மேலூர் 4-ஆம் இரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 17, ஜூன் 2026 7:44:57 PM (IST)









