» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த ஒரு மாதமாகச் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், அவசரச் சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனந்தன்பாலம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது.
உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும், தோண்டப்பட்ட பள்ளத்தைச் சீரமைத்துச் சாலையை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நீடிக்கிறது.
இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பணியில் அலட்சியமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








