» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வியாழன் 11, ஜூன் 2026 3:11:40 PM (IST)
தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை எவ்வித அச்சமுமின்றி அமோகமாக நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது லாட்டரி சீட்டுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் இந்தத் தடை தொடர்ந்ததுடன், விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், ஒரு சில இடங்களில் மறைமுகமாக ஆன்லைன் மற்றும் கேரளா லாட்டரிகள் விற்கப்பட்டு வந்தன.
தற்போதைய நிலை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் அவர்கள் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, கடந்த ஒரு மாத காலமாக லாட்டரி விற்பனை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. தற்போது சாதாரணப் பெட்டிக்கடைகளில் கூட இந்த விற்பனை பரவியுள்ளது.
லாட்டரி விற்பனை நடக்கும் இடங்கள் குறித்துத் தெரிந்திருந்தும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கும் போது மட்டும், பெயரளவிற்கு ஒரு சிலரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்வதோடு தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர் எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திடீர் லாட்டரி மோகத்தால், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் 300 முதல் 400 ரூபாய் வரையிலான பணத்தை வீட்டிற்குத் தராமல் லாட்டரி சீட்டுகளில் முடக்குகின்றனர். இதனால் ஏழைக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
"பெட்டிக்கடைகள் வரை பரவியுள்ள இந்த லாட்டரி கலாச்சாரத்தால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருகிறது. எனவே, பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனையைத் தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்." என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)









ஆதவ்Jun 11, 2026 - 03:16:12 PM | Posted IP 104.2*****