» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழா இன்று (31.5.2026) அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, வல்லநாடு மணிமண்டபத்தில் அமைந்துள்ள வெள்ளையத்தேவனின் திருவுருவச் சிலைக்குப் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிலைக்குப் பூக்களைத் தூவி, மரியாதையைச் செலுத்தினார்.
விழாவில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்படப் பலர் இந்த அரசு விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

கார் மீது லாரி மோதி பெண் பலி - 5 பேர் படுகாயம்: விசாகத் திருவிழா முடிந்து திரும்பியபோது சோகம்!
ஞாயிறு 31, மே 2026 9:38:55 AM (IST)










