» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது - கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 31, மே 2026 9:17:43 AM (IST)
கோவில்பட்டியில் விற்பனைக்காகக் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய அவரது கூட்டாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார், மந்தித்தோப்பு சாலைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு நபர்கள் பெரிய சாக்குப்பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து வாகனத்தில் வந்த போலீஸாரைக் கண்டதும், அவர்களில் ஒரு நபர் சாக்குப்பையை அப்படியே போட்டுவிட்டுப் பாய்ந்து தப்பியோடிவிட்டார்.
சந்தேகமடைந்த போலீஸார் அங்கிருந்த மற்றொரு நபரை அதிரடியாகப் பிடித்து, அவர்கள் வைத்திருந்த சாக்குப்பைகளை அவிழ்த்து சோதனை நடத்தினர். அப்போது, அந்தச் சாக்குப்பைகள் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கையும் களவுமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புகையிலை பொருட்களைக் கடத்தியதாகக் கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சின்னத்தம்பி (38) என்பவரைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த அனைத்து புகையிலை மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் போலீஸாரைக் கண்டு மந்தித்தோப்பு சாலையில் இருந்து தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)










