» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!

வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)



தூத்துக்குடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரும் சாரைப்பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்துள்ள அல்லிகுளம் கிராமத்தின் தெற்குத் தெருவில், நூலகம் அருகே பாரத்ராஜ் என்பவரது வீடு அமைந்துள்ளது. இன்று இவரது வீட்டின் முன்பகுதியில் சுமார் 5½ அடி நீளமுள்ள கரும் சாரைப்பாம்பு ஒன்று திடீரெனப் புகுந்தது. இதைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் முன்பகுதியில் இருந்த கற்களுக்கு அடியில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் லாவகமாகப் பிடித்தனர். 

பிடிபட்ட பாம்பு சுமார் 5½ அடி நீளம் கொண்ட கரும் சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர், அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற வீரர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடுவித்தனர். குடியிருப்புப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்திய பாம்பு பிடிபட்டதால், பாரத்ராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory