» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் ஆட்சியர் ஆய்வு!

வியாழன் 7, மே 2026 4:06:20 PM (IST)


தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சேமிப்புக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர்  விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆட்சியர்  சேமிப்புக் கிடங்கில் மதுபானப் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறை, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகள், கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு கருவிகளின் நிலை மற்றும் மின்சார இணைப்புகள் ஆகியவற்றைக் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும், கிடங்கில் உள்ள சரக்கு இருப்புப் பதிவேடுகளைப் பார்வையிட்ட ஆட்சியர், இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபானங்களின் அளவு, கொள்முதல் செய்யப்பட்ட விவரம் மற்றும் விற்பனைக்காக அனுப்பப்படும் விவரங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்தார். கிடங்கின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory