» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் வாங்கித் தர தந்தை மறுப்பு: வாலிபர் தற்கொலை!
வியாழன் 7, மே 2026 11:49:04 AM (IST)
திருச்செந்தூர் அருகே தந்தை கார் வாங்கித் தர மறுத்துத் திட்டியதால், மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி, கஸ்பா புதுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பவித் குமார் (28). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பரமன்குறிச்சிக்கு வந்துள்ளார்.
ஊருக்கு வந்த பவித் குமார், தனக்குச் சொந்தமாக ஒரு கார் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவரது தந்தை மறுப்புத் தெரிவித்ததுடன், அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பவித் குமார், தனது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகத் திருச்செந்தூர் உதவி ஆய்வாளர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










