» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான நபர் சுடுகாட்டில் சடலமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 11:44:14 AM (IST)
கோவில்பட்டியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 55வயது நபர் சுடுகாட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் ராஜேந்திரன் (55). ராஜேந்திரன் கடந்த மே 1-ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போனார். இது குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் வழக்கப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அத்தை கொண்டான் சுடுகாட்டுப் பகுதியில் ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு போலீஸார், ராஜேந்திரனின் உடலை மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










