» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபர் கைது!
வியாழன் 7, மே 2026 8:49:55 AM (IST)
கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமியிடம் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் சுரேஷ் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று ஜவுளிக்கடை அதிபர் சுரேஷைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










