» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் தற்கொலை: போலீசார் விசாரணை!

வியாழன் 7, மே 2026 8:45:46 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை மதியம், அந்தப் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ஜன்னல் கம்பியில் தனது வேஷ்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருக்கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. இது தொடர்பாகத் திருக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory