» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!
புதன் 6, மே 2026 7:36:42 PM (IST)
கயத்தாறு - கடம்பூர் சாலையில் நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் நரசிம்மன் (65). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த குழியால் நிலைதடுமாறி திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் லோடுடன் வந்த டிப்பர் லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நரசிம்மன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (54) என்பவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஓட்டிவந்த டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










