» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!
புதன் 6, மே 2026 7:36:42 PM (IST)
கயத்தாறு - கடம்பூர் சாலையில் நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரது மகன் நரசிம்மன் (65). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த குழியால் நிலைதடுமாறி திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் லோடுடன் வந்த டிப்பர் லாரி இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நரசிம்மன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (54) என்பவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஓட்டிவந்த டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










