» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது: 2.5 லிட்டர் சாராயம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்!

திங்கள் 4, மே 2026 8:07:13 AM (IST)

ஆத்தூர் அருகே உள்ள குமாரப்பண்ணையூரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த சாராயம் மற்றும் தயாரிப்புப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே சோ்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முத்துக்குமாா் (50) என்பவர், தனது வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் முனியசாமி உள்ளிட்ட போலீஸாா் முத்துக்குமாா் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில், முத்துக்குமாா் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது வீட்டிலிருந்து 2.5 ­லிட்டா் கள்ளச் சாராயம், சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பானை, சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறல் பொருள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதனைத் தொடர்ந்து, கள்ளச் சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக முத்துக்குமாரை ஆத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory