» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே லாரி மீது வேன் மோதி 7 பேர் காயம்!

திங்கள் 4, மே 2026 8:04:45 AM (IST)



தூத்துக்குடி அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது வேன் மோதிய விபத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் ஓட்டி வந்த வேனில், ஒரு குழுவினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள அணுகுசாலை அருகே வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு கனரக லாரி மீது எதிர்பாராதவிதமாக வேன் பலமாக மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் வேனில் பயணித்த மல்லிகா (58) ஆனந்தன் (39) ராஜேஸ்வரி (39) குணசேகரன் (37) சிறுவர்கள் ஹரீஸ்குமார் (11) மற்றும் ஹரீஸ்மா (5) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory