» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரைத் தாக்கி வாய்க்காலில் வீசியவர் கைது : மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 3, மே 2026 9:41:13 PM (IST)
குரும்பூர் அருகே வாலிபரைத் தாக்கி வாய்க்காலில் தூக்கி வீசிய சம்பவத்தில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள சேதுசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (27). இவரது நண்பர் சொக்கப்பழங்கரையைச் சேர்ந்த செந்தில்குமார் (26). இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராஜபதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று சேதுக்குவாய்தான் வாய்க்கால் பாலத்தில் சீனி நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மற்றும் அவரது நண்பரான மாரிமுத்து உள்ளிட்ட 5 பேர், பழைய பகையை மனதில் வைத்து சீனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் சீனியைத் தாக்கி, அங்கிருந்த வாய்க்காலில் தூக்கி வீசினர். இதில் சீனியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட சீனி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள செந்தில்குமார் உள்ளிட்ட மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










