» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்கு: தூத்துக்குடியில் ரவுடிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!

ஞாயிறு 3, மே 2026 9:38:13 PM (IST)

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த டிக்சன் (எ) சுல்தான் (23) மற்றும் இருதய ஜாஸ்பர் (28) ஆகிய இருவரும் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்களுடைய தொடர் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்தார்.

வடபாகம் காவல் நிலைய ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், மேற்படி இருவர் மீதும் இன்று (03.05.2026) தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிக்சன் (எ) சுல்தான் மற்றும் இருதய ஜாஸ்பர் ஆகிய இருவரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory