» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூறாவளி காற்றால் கருவாட்டு குடோன்கள் சேதம் : நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை!
ஞாயிறு 3, மே 2026 9:34:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றினால் கடலோரப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கருவாட்டுக் குடோன்கள் தரைமட்டமானதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றினால் புன்னக்காயல் கடலோரப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மீனவப் பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கருவாட்டுக் குடோன்கள் தரைமட்டமானதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
புன்னக்காயல் மீனவப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கருவாட்டுக் குடோன்கள் சூறாவளி காற்றினால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வந்தாலும், புயல் வீசினாலும் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். எங்களின் ஒரே வாழ்வாதாரமான கருவாடு விற்பனை முடங்கியுள்ளதால் குடும்பத்தை நடத்த வழியின்றி தவிக்கிறோம் என்று மீனவப் பெண்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்து நீண்ட நேரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகளோ அல்லது மற்ற அரசு அதிகாரிகளோ சேதமடைந்த பகுதிகளை வந்து பார்வையிடவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டினலட்டா ரவி கூறுகையில்: "ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆண்ட கட்சியாக இருந்தாலும் மீனவ மக்களைத் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனரே தவிர, அவர்களின் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முன்வருவதில்லை. புன்னக்காயல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தினால் சுமார் 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் உடனடியாகப் பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுமே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










