» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆபத்தான டிஜிட்டல் பேனர்கள்: உடனடியாக அகற்ற சிபிஎம் வலியுறுத்தல்!

ஞாயிறு 3, மே 2026 9:27:47 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி  மாநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள ராட்சத டிஜிட்டல் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. பல இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

தற்போது தூத்துக்குடியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால், பலவீனமாக உள்ள பேனர்கள் சரிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்களையும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory