» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ - பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!
ஞாயிறு 3, மே 2026 10:07:11 AM (IST)
உடன்குடி அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கணேஷ் (31), கூலித் தொழிலாளி ஆவார். இவர் நேற்று உடன்குடியில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது கணேஷின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த மோதலில் தூக்கி வீசப்பட்ட கணேஷிற்குப் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










