» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் மூழ்கி அரசு ஐடிஐ மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்!
ஞாயிறு 3, மே 2026 9:26:34 AM (IST)
தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி 19 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். தந்தைக்கு உதவியாக ஆடு மேய்க்கச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள வரதராஜபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவரது மகன் மாரிச்செல்வம் (19), தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தைக்கு உதவியாக மாரிச்செல்வம் ஆடு மேய்க்கச் செல்வது வழக்கம்.
நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், மாரிச்செல்வம் ஆடுகளை உமரிக்கோட்டை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்ட முயன்றபோது, ஆடுகள் அனைத்தும் மொத்தமாக ஆழமான பகுதியை நோக்கிச் சென்றுள்ளன. அவற்றைப் பிடிக்கச் சென்ற மாரிச்செல்வத்திற்கு நீச்சல் தெரியாததால், எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கினார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தட்டப்பாறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடி மாரிச்செல்வத்தை மீட்டனர். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரிச்செல்வம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாளில் தந்தைக்கு உதவியாகச் சென்ற மாணவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










