» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

ஞாயிறு 3, மே 2026 9:19:37 AM (IST)



தூத்துக்குடியில் மீன்களின் வரத்து குறைந்ததாலும், மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதாலும் மீன்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. 

தற்போது விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மட்டுமே மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் நேற்று  சனிக்கிழமை கரை திரும்பியபோது மீன்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. 

குறைவான வரத்தும் அதிக தேவையும் இருந்ததால் விலை பன்மடங்கு உயர்ந்தது. சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின. வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களுக்குக் கூடுதல் விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory