» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்

சனி 2, மே 2026 4:27:08 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்த உத்தரவை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய பள்ளியில் 2026-27 கல்வியாண்டிலிருந்து முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தூத்துக்குடி, பாரதி நகர், ஹார்பர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஹார்பர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இந்தப் பள்ளி செயல்படும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் வ.உ.சி. துறைமுக ஆணையமே ஏற்கும். மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கேந்திரிய வித்யாலயா சங்கதனின் 'புராஜெக்ட் செக்டார்' விதிகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும். நிலம் மற்றும் தற்காலிகக் கட்டிட ஏற்பாடுகள் நிறைவடைந்த 30 நாட்களுக்குள் மாணவர் சேர்க்கை செயல்முறையை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தூத்துக்குடி பகுதியில் உள்ள துறைமுகப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.


மக்கள் கருத்து

Mugeshமே 4, 2026 - 02:50:27 PM | Posted IP 172.7*****

In which location ?

Durgaமே 3, 2026 - 11:00:44 AM | Posted IP 104.2*****

Admission eppo

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory