» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி: 401 திருவிளக்கு பூஜை கோலாகலம்!
சனி 2, மே 2026 8:30:48 AM (IST)

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 401 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், உலக நன்மைக்காக.
நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழிக்கவும், வறட்சி நீங்கவும்
உலகில் அன்பு, அமைதி நிலவவும், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமைய வேண்டியும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.
விழாவில் கோவில் செயலாளர் கார்த்திக்ராஜா, பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அர்ச்சகர் ஆறுமுகச்சாமி செய்திருந்தார். பூஜையின் நிறைவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)









