» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிக்னல்களில் பசுமைப் பந்தல்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:36:11 PM (IST)



தூத்துக்குடி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ள 'பசுமைப் பந்தல்' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் காத்திருக்கும்போது கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி 'பசுமைப் பந்தல்' அமைக்க வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் முக்கிய போக்குவரத்துச் சந்திப்புகளில் நிழல் தரும் வகையில் தற்காலிகப் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகச் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் எட்டயபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களின் நான்கு புறங்களிலும் இந்தப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும் இடத்தில் உயரமாகப் பிணைக்கப்பட்டுள்ள இந்தப் பந்தல்கள், சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்காதவாறு நிழல் தருகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "வெயில் காலத்தில் சிக்னலில் 60 முதல் 90 விநாடிகள் காத்திருப்பது பெரும் சவாலாக இருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்தப் பசுமைப் பந்தல் மிகுந்த குளிர்ச்சியையும், நிழலையும் தருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமிக்கச் செயல் பாராட்டுக்குரியது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory