» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - போலீஸ் விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:38:11 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவரை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில், தினேஷ் தனது நண்பர் தேவராஜ் (26) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பிரையண்ட் நகர் 10-வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தினேஷின் வாகனத்தை வழிமறித்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி தினேஷை மிரட்டிய அந்த நபர்கள், அவரிடமிருந்த ரூ. 10,000 மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட தினேஷ் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த இரு நபர்கள் யார்? அவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)

பெண் வங்கி மேலாளரை நாற்காலியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!
புதன் 29, ஏப்ரல் 2026 8:13:53 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் திருவிழா: 8-ஆம் நாளில் குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 9:23:16 PM (IST)

தூத்துக்குடி சிக்னல்களில் பசுமைப் பந்தல்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:36:11 PM (IST)

பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:52:48 PM (IST)








