» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)
ஆறுமுகநேரியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் வசிப்பவர் உத்திரம் இவரது மகன் அருள் முத்து (22). மது போதைக்கு அடிமையானவர் இவர் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ஆறுமுகநேரிலிருந்து காயல்பட்டணம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கி விட்டாராம்.
சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை ஆறுமுகநேரி காயல்பட்டினத்தை கடந்து சென்ற போது தண்டவாளத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த அருள் முத்து மீது ஏறி இறங்கியதில் அவரது உடல் முழுவதும் துண்டு துண்டாக வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)

பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு: முகமூடி ஆசாமி கைவரிசை - போலீஸ் விசாரணை!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:06 AM (IST)








