» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்

திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)

கயத்தார் அருகே கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்தவர் குமரேசன் இவரது மகன் கணேசன் (32). பாளையங்கோட்டை செஞ்சி காலணியில் வசிப்பவர் மோகன் இவரது மகள் ஐஸ்வர்யா (27). இவர்கள் 2 பேரும் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் காரில் திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரி செல்வம் வயது 29 என்பவர் ஓட்டி வந்தார். 

மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் கயத்தார் அருகே உள்ள ராஜா புதுக்குடி ஹோட்டல் அருகே வரும்போது கார் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதில் டிரைவர் மாரிசெல்வம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த கணேசன் மற்றும் ஐஸ்வர்யா இரண்டு பேரும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory