» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்களிப்பு

வியாழன் 23, ஏப்ரல் 2026 11:48:07 AM (IST)



'இயேசு விடுவிக்கிறார்' ஊழிய நிறுவனத்தின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய வேட்பாளர்களும், பிரமுகர்களும் காலையிலேயே தங்களது வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.

திமுக வேட்பாளர் வாக்களிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ராமஜெயம், குரும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இயேசு விடுவிக்கிறார்' ஊழிய நிறுவனத்தின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

அம்மன்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், காலையிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory