» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:56:56 AM (IST)
உடன்குடி அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சிவலூர், மணங்கொண்ட அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் பிரபு (33). பிரபு கட்டிடக் கூலி வேலை செய்து வந்தார். இவருக்குச் சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான பிரபு, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் அவருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. வழக்கம்போல் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் மனவேதனையில் இருந்த பிரபு, நேற்று இரவு தனது வீட்டிற்கு அருகில் இருந்த கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு திமுகவே காரணம்: கனிமொழி எம்பி பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:13:07 PM (IST)

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST)

மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 3:56:04 PM (IST)

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)






