» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:56:56 AM (IST)

உடன்குடி அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சிவலூர், மணங்கொண்ட அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் பிரபு (33). பிரபு கட்டிடக் கூலி வேலை செய்து வந்தார். இவருக்குச் சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான பிரபு, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

இதனால் அவருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. வழக்கம்போல் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் மனவேதனையில் இருந்த பிரபு, நேற்று இரவு தனது வீட்டிற்கு அருகில் இருந்த கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory