» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 12:43:41 PM (IST)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஏப்ரல் 13) மிக விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் விளா பூஜைகள் நடைபெற்றன.
உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். பக்தர்களின் "அரோகரா" கோஷங்களுக்கு இடையே முதலில் சுவாமி தேரும், அதனைத் தொடர்ந்து அம்மன் தேரும் இழுக்கப்பட்டன. நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர்கள் நிலை வந்து சேர்ந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வேட்பாளர்கள் பங்கேற்பு
விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ, பாஜக மாநிலத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய தேரோட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் தமாகா மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 6ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
சனி 2, மே 2026 4:27:08 PM (IST)

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)









